Wednesday, March 16, 2011
தமிழகத்தில் மூன்றாவது அணியா ???
நேற்று மாலை தே.மு.தி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அ.தி.மு.க வுடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடக்க மறுபக்கம் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது இதில் ம.தி.மு.கவிற்கு இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க பலம் வாய்ந்ததா என்று கணித்ததோ இல்லையோ ஆனால் அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளால் கேட்கப்பட்ட தொகுதிகளாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கட்சித் தலைமை தீர்மானமாக இருந்ததாக தெரிகிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த தோழமை கட்சிகள் அவரவர் கேட்ட தொகுதிகளை வழங்காவிட்டால் மூன்றாவது அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது . இது குறித்து அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இன்று அவசர கூட்டம் போட்டுள்ளது . ம.தி.மு.க 19 ஆம் தேதி அவசரக்கூட்டம் போட்டுள்ளது . அது ஏப்ரல் 19 ஆகா இல்லாமல் மார்ச் 19 ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment