Thursday, March 17, 2011

இன்று தமிழக அரசியலில் முக்கியமான நாள் ஆகுமா ???

அ.தி.மு.கவின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அதிர்ந்து போன கூட்டணி கட்சிகள் நேற்று அவசர் கூட்டம் நடத்தினர் . கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் , புதிய தமிழகம் கட்சித்தலைவர் , தமிழகத்தில் மேலும் பல கட்சிகள் இருக்கிறது என்றே நேற்றுதான் தெரிய நேரிட்டது அத்தனை பேரும் தே.மு.தி.க கட்சித்தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து மூன்றாவது அணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . ஆனால் விஜயகாந்த் இன்னும் காத்திருப்பதாகத்தான் தெரிகிறது . அது அ.தி.மு.கவிற்கா இல்லை ம.தி.மு.விற்கா என்பது குறித்தும் முடிவெடுத்தாக தெரியவில்லை . இதுகுறித்து இன்று கூறுவதாக தெரிவித்துள்ளார் . ஆனால் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது . தமிழக அரசியலின் முக்கிய கூத்துகள் இன்று அரங்கேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள் .

No comments:

Post a Comment